Home » கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பு: திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பு: திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

Coimbatore, Madurai Metro Rail projects rejected: Central government returns project report

சென்னை: கோவை, மதுரை நகரங்​களுக்​கான மெட்ரோ ரயில் திட்​டங்​கள் தொடர்​பாக மெட்ரோ ரயில் நிறு​வனம் அனுப்​பிய திட்ட அறிக்​கை​யை, மத்​திய அரசு திருப்பி அனுப்​பி​விட்​ட​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. சென்னையைத் தொடர்ந்​து, மதுரை, கோவை உள்​ளிட்ட 4 நகரங்​களில் மெட்ரோ ரயில் திட்​டத்தை செயல்​படுத்த தமிழக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. கோவை​யில் 39 கி.மீ. தொலை​வுக்கு அவி​நாசி சாலை​யில் கரு​மத்​தம்​பட்டி வரை​யிலும், உக்​கடத்​தில் இருந்து சத்​தி​யமங்​கலம் சாலை​யில் வலி​யம்​பாளை​யம் பிரிவு வரை​யிலும் மெட்ரோ ரயில் பாதை அமை​யும். அங்கு 32 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டன.

அதே​போல, மதுரை​யில் திரு​மங்​கலம்​-ஒத்​தக்​கடை வரை 31.93 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில் திட்​டம் செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டது. 27 கி.மீ. மேம்​பால பாதை​யில் 23 மெட்ரோ ரயில் நிலை​யங்​களும், 4.65 கி.மீ. சுரங்​கப்​பாதை​யில் 3 மெட்ரோ ரயில் நிலை​யங்​களும் அமைக்​கத் திட்​ட​மிடப்​பட்​டன. கோவை, மதுரை​யில் மெட்ரோ ரயில் திட்​டத்​தைச் செயல்​படுத்​து​வதற்​கான விரி​வான திட்ட அறிக்​கையை மாநில அரசிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஏற்​கெனவே வழங்​கியது. இதையடுத்​து, கோவை, மதுரை​யில் மெட்ரோ ரயில் திட்​டத்தை செயல்​படுத்​து​வதற்கு தமிழக அரசு ஒப்​புதல் வழங்​கியது.

அதன்​படி, மதுரை​யில் ரூ.11,340 கோடி​யிலும், கோவை​யில் ரூ.10,740 கோடி​யிலும் மெட்ரோ ரயில் திட்​டங்​களை செயல்​படுத்​து​வதற்​கான விரி​வான திட்ட அறிக்​கையை மாநில அரசு வாயி​லாக, மத்​திய அரசிடம் கடந்த ஆண்டு பிப்​ர​வரி மாதம் மெட்ரோ ரயில் நிறு​வனம் சமர்ப்​பித்​தது. இதை ஆய்வு செய்த மத்​திய அரசு, சில மாற்​றங்​களை செய்​து, அறிக்​கையை திருத்தி அனுப்​பு​மாறு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, திருத்​தப்​பட்ட அறிக்​கை, கூடு​தல் ஆவணங்​களு​டன் கடந்த ஆண்டு நவம்​பரில் மீண்​டும் அனுப்​பப்​பட்​டது.

இது தொடர்​பாக மத்​திய அரசிடம் இருந்து எந்த பதி​லும் வரவில்​லை. இந்​நிலை​யில், கோவை, மதுரை நகரங்​களில் மெட்ரோ ரயில் திட்​டத்தை செயல்​படுத்​தும் அறிக்​கைக்கு ஒப்​புதல் வழங்​காமல், மத்​திய அரசு திருப்பி அனுப்​பிஉள்​ளது. 2017-ம் ஆண்​டைய மெட்ரோ ரயில் திட்​ட​வி​தி​கள்​படி 20 லட்​சம் மக்​கள்​தொகைக்கு மேல் உள்ள நகரங்​களில் மட்​டுமே மெட்ரோ ரயில் திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

ஆனால், 2011 மக்​கள் தொகை கணக்​கெடுப்பு படி கோவை​யில் 15.84 லட்​சம், மதுரை​யில் 15 லட்​சம் மக்​கள் தொகை இருப்​ப​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மெட்ரோ ரயில் திட்​டத்​துக்​குப் பதிலாக, பேருந்​துகள் மட்​டுமே இயக்​கப்​படும் பிஆர்​டிஎஸ் (பஸ் ரேபிட் டிரான்​சிட் சிஸ்​டம்) போன்ற திட்​டத்தை செயல்​படுத்​தலாம் என்​றும் மத்​திய அரசு தெரி​வித்​திருப்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்ளது.

இதுகுறித்​து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறும்​போது, “மத்​திய அரசின் ஒப்​புதல் கிடைத்​து​விடும் என்ற நம்​பிக்​கை​யில், கோவை, மதுரை​யில் மெட்ரோ ரயில் திட்​டத்​துக்​காக நிலங்​களைக் கையகப்​படுத்​தும் பணி தொடங்​கப்​பட்​டது. ஆ​னால், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்​டங்​களுக்​கான திட்ட அறிக்​கையை மத்​திய அரசு திருப்பி அனுப்​பி​விட்​டது. இது தொடர்​பாக தமிழக அரசு ஆலோனை நடத்​தி, அடுத்​தகட்ட நடவடிக்​கையை மேற்​கொள்​ளும் என்று எதிர்​பார்க்​கிறோம்” என்​றனர்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)